கட்டுரைகள்

:
ஒரு ஸென் குருவின் ஹைக்கூ
உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி.

ஸென் கவிஞர் கூறுகிறார்.
“வண்ணத்துப் பூச்சி எனப்படும் இது என்ன? அது தன் ஆதார மூலத்திற்குத் திரும்பவும் ஒரு உதிர்ந்த இலையாகத் தன் உதிர்ந்த இலையாகத் தான் இருக்க வேண்டும்.”இவ்வகைச் சொல்லோவியங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.



ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்...... 

ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வானவில் போன்றது..அதன் கண நேர அனுபவத்தைப் படிப்பவர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

பெரும்பாலும் தமிழில் எழுதப்படும் ஹைக்கூக்கள்; அதன் அடையாளத்தைத் தொலைத்துவிட்டனவாகவே உள்ளன.அதற்காக உண்மையான ஹைக்கூ என்பது இதுதான் என்று நானே அதை நீட்டி முழங்காமல் சுஜாதாவின் ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ நூலைத் துணைக்கழைக்கிறேன்.(மேலே எழுதிய ஹைக்கூக்கள் என்னுடைய சிறிய முயற்சி)


அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்

அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்’ என்ன ஒரு அழகிய தலைப்பு…! இந்த நாவலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கின்றது.அலெக்ஸான்டரின் சரித்திர கதையும் தற்கால சமூகக் கதையும் இரு சமாந்தரப் பாதைகளாக நீண்டு செல்லும் நாவலில் ஒரு சமயம் அவைகளை சந்திக்கவும் வைக்கிறார் எழுத்தாளர்.Autofiction என்கின்ற தன்பெருக்கி முறையை இந்நாவலில் சுரேஷ் கையாண்டிருக்கிறார்

மேலும் படிக்க ....  



M.G.சுரேஸ் - பிரமிக்க வைக்கும் எழுத்துக்களிற்குச் சொந்தக்காரர்




இவ்வார வலைப்பதிவில் எனக்குப் பிடித்த பிரபல எழுத்தாளர் M.G..சுரேஸ் அவர்களின் நாவல்களைப் பற்றிய எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

M.G.சுரேஸ் - பிரமிக்க வைக்கும் எழுத்துக்களிற்குச் சொந்தக்காரர் M.G.சுரேஸ் ஒரு சிறந்த இலக்கியவாதி.பின்நவீனத்துவ இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.இவரால் எழுதப்பட்ட நாவல்கள்
1. அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்(திருப்பூர் தமிழ் சங்க விருது பெற்ற நாவல்)
2. அலெக்ஸான்டரும் ஒரு கோப்பை தேநீரும்
3. தாஜ்மஹாலுக்குள் சில எலும்புக்கூடுகள்
4. கான்க்ரீட் வனம்
5. 37 (a polyphonic novel)
6. உறங்க என்றொரு நகரம்
7. சிலந்தி



80 நாளில் உலகம் - a Julus Vern's Novel

ஒரு தேர்ந்த எழுத்தாளனின் உலகப் பிரசித்தி பெற்ற நாவல் ஒன்றை வாசித்து முடித்துவிட்டேன்.’80 நாளில் உலகம்’ என்ற அந்த அழகிய நாவல் Julus Vern(France) என்ற எழுத்தாளரால் முதலில் பிரெஞ்சு மொழியில் ((Le tour du monde en quatre-vingts jours(French title)) எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் Around the World in 80 days’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.




நிலாப் பார்த்தல்


மனிதன் நிலவுக்குப் முதன் முதல் பயணம் செய்து கால் நுற்றாண்டைக் கடந்விட்டோம்,ஆனாலும் இன்று வரை...

திடீரென உலகம் ஒரு நெல்லிக்காயை விடவும் சிறியதைப் போலச் சுருங்கி விட்டது போன்று தோன்றுகிறது.தொலைவு என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது.காரணம்,மின்சாரமும் நவீன விஞ்ஞான சாதனங்களின் வளர்ச்சியும் நம் இருப்பிடத்துக்குள் உலகைச் சுருக்கிட்டு இழுத்து வந்துவிட்டன

No comments:

Popular Posts