Thursday, June 24, 2010

ஒரு தமாஷான பேய்க்கதை


எழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் கதைகள் சுஜாதாவின் கதை சொல்லும் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியதோடு மட்டுமின்றி ஏராளமான எழுத்தாள்ர்கள் உருவாவதற்கும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது என்று கூறின் அது மிகையாகாது.

ஆங்கிலத்தில் வெளிவந்த Sudden Fiction ,Short Science Fiction ,ஹைபுன்,ஹைகா என பல்வேறுபட்ட வடிவங்களை தமிழில் அறிமுகப்படுத்தி பின்னா; அவைகளை போன்று தமிழிலும் முயன்றிருக்கின்றார் சுஜாதா.இவை குமுதம் இதழில் முன்னா; வெளிவந்திருந்தது வாசகர்கள் அறிந்ததே.இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் வாசகர்களையூம் இவ்வகைக் கதைகளை எழுதத்துhண்டி அவற்றில் சிறப்பானவற்றை வெளியிட்டமையாகும்.என்போன்ற எத்தனையோ வாசகர்கள் இதில் பங்குகொள்ளமுடியாமல் முடியாமற் போய்விட்டது.எனினும் எமது சுஜாதா மறைந்தாலும் அவாpன் முயற்சியைத் தொடருரலாம் என நினைக்கின்றேன்.கீழே அவை தொடர்பான சுஜாதாவின் விளக்கக் குறிப்புகளையூம் அதனைத் தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட கதைகளையூம் தருகின்றேன்.


சிறு சிறுகதைகள்....

---------------------------
சி.சி.கதை என்பது நீதிக்கதை அல்ல.உபதேசக் கதையூம் அல்ல.மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட கதை அது.அது சட்டென்று ஏற்படுத்தும் விளைவூம்,அதன் காலப்பிரமாணமும் சிலசமயம் ஒரு முழு நாவலை உள்ளடக்கியிருக்கும்.

ஒரு உதாரணம்:

ஒரு தமாஷான பேய்க்கதை

அந்தக் காவல் நிலையம் இரவில் மெனமாக இருந்தது.லாக்-அப்பில் அதிகம் கைதிகள் இல்லை.குடித்த கேஸ்கள் எல்லாம் பெஞ்சில் படுத்துவிட்டார்கள்.ரைட்டர் மாதவனால் துhங்க முடியவில்லை.


கொசுவர்த்தி சுருள் காலடியிலும் மேஜை மேலும் கொளுத்தி வைத்துஇகூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து ,ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு,கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாச்சாரம் வைத்தும்…மயிலாப்பூர் கொசுக்கள்,’இதெல்லாம் எந்த மூலைக்கு… வேலைக்கு உதவாது’ என்று இஷ்டப்பட்ட இடத்தில் காக்கி உடை மேல் உட்கார்ந்து கால்களைத் தேய்த்துக்கொண்டு நோவாகாக இன்ஜெக்ஷன் குத்தி இரத்தம் உறிஞ்சி,மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு ‘நன்றி’ என்று சொல்லிப் பறந்து சென்றனர்.


மாதவன்,போலீஸ் வேலையை விட்டுவிடுவதாக மறுபடி தீர்மானித்தார்.கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில்,உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார்.அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான்.கொஞ்சம் களைத்திருந்தான்.ஏதோ அடிபட்டவன் போலத் தோன்றினான்.காதருகே ரத்தக்கோடு தெரிந்தது.


“யாருப்பா?”

“ஐயா,நான் ஒரு எஃப்.ஐ.ஆர்.பதிவூசெய்ய வந்திருக்கேங்க.”

“என்ன விஷயம்?”

“ஒரு கொலை நடந்துபோச்சு.அதை பதிவூ செய்ய வந்திருக்கேங்க”

“எங்க நடந்துச்சு?”

“இங்கிருந்து நுhறடி தள்ளி இதே ரோடுல”

“செத்தது யாரு?”

“நடராசுங்க”

“உங்க பேரு?”

“நடராசுங்க”


மாதவன் சிரித்தார்.”செத்தது நடராசு… hpப்போர்ட் செய்யறதும் நடராசு … வினோதமாத்தான் இருக்குது.இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.”

“இறந்ததும் நாந்தாங்க.”

“புரியலை.இறந்துபோனது நீதான்னா… எப்படிய்யா எஃப்.ஐ.ஆர்.எழுத வந்திருக்கே?”

“ஏங்க வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக்கூடாதா?”

“ஒண்ணுமில்லையே… சொல்லு,ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா… சமுதாயத்தின் மேல கோவமா எழுதற ஆளா?”

“இல்லைங்க,நான் எறந்துட்டேங்க.அதை எஃப.ஐ.ஆர் பதிய வந்தேங்க.”

மாதவன் கோபத்துடன், “யோவ் உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலில உக்கார முடியூம்-பேசும்-புகாம் கொடுக்க முடியூம்.”

“என்னால முடியூதுங்களே…”

“அப்ப,நீ உயிரோடதான் இருக்கேன்னு அர்த்தம்.நோ க்ரைம்.”“அப்ப நான் சாவலையா?”

“பாரு,நீ சாவலை.வேற யாரோ செத்ததைப் பாத்ததை நீ செத்ததா நினைச்சிட்டிருக்கே.ஒரு கிளாஸ் தண்ணி குடி.எல்லாம் சரியாயிடும்.”

“இல்லைங்க,நாந்தாங்க… இப்பத்தாங்க செத்தேன்” என்றான் அழாக்குறையாக.

“சரியாப்போச்சு” என்று அலுத்துக்கொண்டார் மாதவன்.ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது.குறும்போ,விளையாட்டோஇகேலியோ ஏதும் இல்லை.மாதவனை அது சங்கடப்படுத்தியது.?”


“ஒரு விபத்தில் செத்தங்க.சைக்கிள் ஓட்டிக்கிட்டு வந்தப்ப,எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா கார்ல வந்து மோதிட்டாங்க.கார் நம்பர் எல்லாம் நோட் பண்ணி ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேங்க.அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க!”

“யோவ்! வேளையாடறியா?”

“இல்லைங்க,மெய்யாலுமே செத்துட்டங்க.”

மாதவன் சற்று நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

பெஞ்சில் படுத்திருந்த போதை நீங்கிய குடிகாரன்,”ரைட்டர் ஐயாதான் சொல்றாரில்லை.போவியா…” என்று அதட்டினான்.

“பாருஇ நீ செய்யறதெல்லாம் உயிருள்ளவங்க செய்யற வேலைய்யா… நீ சாவலை,சாவலை.”

“நான் செத்தாச்சுங்களே!”

மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.“சார்! ராத்திரி வேளையில தொந்தரவூ கொடுக்கறதுக்கு மன்னிச்சுக்குங்க…”

“தொந்தரவூ கொடுத்தாச்சுஇஎன்ன சொல்லுங்க?”

“ஒரு ஆளு டெத் ஒண்ணை ரிப்போர்ட் பண்ணணும்ங்கறான்இசெத்தது யாருன்னா நான்தாங்கறான்.”

“குடியா?”

“தெரியலை.ட்ரக் ஏதும் எடுத்தாப்பலயூம் தெரியலை.சாதுவாத்தான் இருக்கான்.”

“ஒண்ணு செய்யி.. அவனை காலைல வரச்சொல்லுஇஇன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.”

“கேக்கமாட்டேங்கறான் சார்.திருப்பித் திருப்பி ‘நான் செத்தாச்சு செத்தாச்சுங்கறான்.”“போனை அவன்கிட்ட கொடு.நான் பேசறேன்.”

“இந்தாய்யாஇஎங்க எஸ்.பி.கிட்ட பேசு” என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன்.

அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கென்று விழுந்தார்.

“அய்யா வணக்கங்க! எம்பேரு நடராசுங்க” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்.

4 comments:

DILO said...

ஒரு தமாஷான கதை.....m m m m.....

Anonymous said...

//சி.சி.கதை என்பது நீதிக்கதை அல்ல.உபதேசக் கதையூம் அல்ல.மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட கதை அது.அது சட்டென்று ஏற்படுத்தும் விளைவூம்,அதன் காலப்பிரமாணமும் சிலசமயம் ஒரு முழு நாவலை உள்ளடக்கியிருக்கும்.//

Ithai pola entha oru unarvum antha si.si.kadhaiayai paditha pothu earpadavillaye??
Enakku rasanai kuraiva?

Unknown said...

ஹி ஹி.. சுயரூபத்தைக் காட்டிடுச்சா கடைசியில.. :P

THARMIKA said...

மெய்யாலுமே nice story

Popular Posts