எனது பயணம்
சில பொழுதுகளில்
கனவுகளில்
தொடர்கிறது
விழிப்பு வந்தபோதும்
விழிகளிலேயே தங்கிவிடுகிறது
வியர்த்தமான பொழுதுகள்
இப்போது
பாலைவனத் தனிமையை
உணர்கிறேன்
முன்பும்
இங்கேதான் இருந்தேன்
ஆனால்
நீயிருந்தாய்!
வார்த்தைக்கு வார்த்தை
மௌனத்திற்கு மௌனம்
நம்மிடையே
நிகழ்ந்துகொண்டேயிருந்தது
இப்போது
வெறுமையின் திக்கில்
நகர்கிறது
வாழ்க்கை
தவறி வீழ்ந்தவனிலும்
தானாய் வீழ்ந்தவனின்
அனுபவம்
அலாதியானது
சிறிய
உணர்வுகள் கூட
சிலவேளைகளில்
அத்திவாரத்தையே பெயர்த்துவிடும்
ஆனால்
எனது அத்திவாரமே
அவைகளில்
உருவானதுதான்
அறிவாயா?
Tuesday, March 29, 2011
Friday, January 14, 2011
நிலவு வெளியில்....
Friday, January 7, 2011
மரிக்கும் நீரூற்று
கடந்து வந்த
பாதையின்
நீட்சி
திரும்ப முடியா
பயணத்தின்
எல்லை
பாதைகள்
பிரிந்துகொள்ள
தனிமையுடன்
கைகோர்த்துக்கொள்கிறேன்
நினைவுகளின் கனதி
அழுந்துகிறது
இனி
நடப்பது
கடினம்....
பாதையின்
நீட்சி
திரும்ப முடியா
பயணத்தின்
எல்லை
பாதைகள்
பிரிந்துகொள்ள
தனிமையுடன்
கைகோர்த்துக்கொள்கிறேன்
நினைவுகளின் கனதி
அழுந்துகிறது
இனி
நடப்பது
கடினம்....
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் திரைப்படப்பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலத்தில் உருவாகி வெளியாகி இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன், அவர்...
-
'பறவையின் பாதை' – அப்துல் ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட...
-
படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்...
-
நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல...
-
"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man&q...
-
ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வா...
-
ஒரு ஸென் குருவின் ஹைக்கூ: உதிர்ந்த இலை கிளைக்குத் திரும்புகிறதோ? வண்ணத்துப் பூச்சி. ஸென் கவிஞர் கூறுகிறார். “வண்ணத்துப் பூச்சி எனப்படும் இ...
-
எழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் க...
-
மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை , இரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு...! எனது சின்னப் பொ...
-
‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயல...