சிறுகதைகள்

எங்கே எனது கவிதை
இந்த அதிகாலை எவ்வளவு அழகாக விடிந்திருக்கிறது. எனக்காகவே விடிந்த காலை இது. நான் இழந்த சந்தோஷத்தை மீண்டும் அடைந்துகொள்ளப் போகும் தருணத்தை எண்ணிப் பார்க்க்கும்போதே மகிழ்வூட்டுகிறதே!

அந்தக் கணத்தில் நான் தொலைந்துதான் போகப்போகிறேன்...!
அம்மா..... உன்னைப் பிரிந்து உன் அன்பு மகள் முழுதாய் ஐந்து வருடங்கள் வாழ்ந்துவிட்டாள்... இன்று மீண்டும் உன் மடிதேடி வருகிறாள்.
(தொடர்ந்து வாசிக்க...)



காகிதக் கப்பல் - சிறுகதை


மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லைஇரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது.
எங்கும் வெள்ளக்காடு...!
எனது சின்னப் பொண்ணு நித்யா வீட்டுக்கு முன்னே வெள்ளத்தில் காகிதக்கப்பல் விட்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
நான்கே வயதுதான்சுட்டித்தனத்துக்குக் கொஞ்சமும் குறைச்சலில்லை...!
மழை நாட்கள் எப்போதும் கடந்தகாலத்தின் இன்னொரு அழகிய மழைநாளை ஞாபகப்படுத்திவிடுகிறது. இந்த மழையும் நித்யாவும் எனது சின்ன வயசு ஞாபகங்களை அள்ளிவருகிறார்கள்.

"உங்களுக்கு நல்ல கொண்டாட்டம்தான்டா பள்ளிக்கூடமும் இல்லை படிப்பும் இல்லைநல்லா மழையில கூத்தடிச்சுக் கொண்டு திரியுங்கோ..."

No comments:

Popular Posts