பூக்களைக் கிள்ளாது
ரசித்துப் பார்
பட்டாம்பூச்சிகளின் படபடப்பில்
கண்கள் விரிந்த
ஆச்சர்யம்
நீரில் குதிக்கும்
மீன்களின் துள்ளலில்
உற்சாகம்
பூச்சிகளை
நசுக்காத மனம்வேண்டும்;
அவைகளின் விதி முடிக்காதே
நட்சத்திர இரவுகளையும்
மறந்துவிடாதே
புயல்களில் தப்பித்தல்தான்
வாழ்க்கையல்ல;
மழையில் நடனமிடுதலும்
வாழ்க்கைதான்...!
Monday, July 22, 2013
Wednesday, July 17, 2013
உனது வீடு செல்
உனது
வார்த்தைகளின்
முகத்திரையை,
அடிக்கடி உன்னைவிட்டுத்
தப்பித்து ஓடாதே
கண்ணீரிலிருந்து
புன்னகைக்குள்
குதித்துவிடு
நாளைக்குக் கூட
காலை வரும்
நீயும் விடியலாம்...!
Tuesday, July 16, 2013
அந்தி வரும் நேரம்
Sunday, July 14, 2013
அவள் தேவதை
Thursday, July 4, 2013
நிலவு இல்லாத இரவுகள்
இரவில்
வெகுநேரம்வரை
நாம் மௌனத்தில்
பேசிக்கொள்வது பிடித்திருக்கிறது,
உன் இசையின்
பாடல்கள்
எனக்குள் மழையாகிப்
பொழிகின்றன
எனது எண்ணங்கள்
ஒவ்வொன்றும்
தீயாகி எரியும்போது
நாமும் அதனுள்
எரிந்துபோகிறோம்
மலைகளில் பயணித்த
எனக்கு
இந்தப் பள்ளத்தாக்குகள்
மலைப்பாகவே இருக்கின்றன
நமது ஆன்மாக்கள்
ஒன்றாய் வேடிக்கைபார்த்த
சில சண்டைகள்
அடிக்கடி
நினைவில் வருகின்றன
புலராத ஒரு பொழுதில்
சிவப்பாய்த் திலகமிடக்
காத்திருக்கிறது
காலம்
அதுவரை
இந்தக் கவிதைகள்
நமக்கிடையே
காற்றாய் நிரம்பியிருக்கட்டும்
- சுரேந்திரகுமார்
வெகுநேரம்வரை
நாம் மௌனத்தில்
பேசிக்கொள்வது பிடித்திருக்கிறது,
உன் இசையின்
பாடல்கள்
எனக்குள் மழையாகிப்
பொழிகின்றன
எனது எண்ணங்கள்
ஒவ்வொன்றும்
தீயாகி எரியும்போது
நாமும் அதனுள்
எரிந்துபோகிறோம்
மலைகளில் பயணித்த
எனக்கு
இந்தப் பள்ளத்தாக்குகள்
மலைப்பாகவே இருக்கின்றன
நமது ஆன்மாக்கள்
ஒன்றாய் வேடிக்கைபார்த்த
சில சண்டைகள்
அடிக்கடி
நினைவில் வருகின்றன
புலராத ஒரு பொழுதில்
சிவப்பாய்த் திலகமிடக்
காத்திருக்கிறது
காலம்
அதுவரை
இந்தக் கவிதைகள்
நமக்கிடையே
காற்றாய் நிரம்பியிருக்கட்டும்
- சுரேந்திரகுமார்
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் கடல் திரைப்படப்பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலத்தில் உருவாகி வெளியாகி இருக்கின்றன. ஆஸ்கார் நாயகன், அவர்...
-
'பறவையின் பாதை' – அப்துல் ரகுமானின் சுஃபிக் கவிதைத் தொகுப்பு. இன்றுதான் வாங்கி வாசித்துக் கொண்டிருக்கிறேன். முன்னுரையிலே சொல்லிவிட...
-
படித்தவர்களுக்கு மட்டுமேயான கவிதைக்கலை பாரதிக்குப் பின் பாமரர்க்கும் என்றாகிவிட்டது.அந்த வழியில் கவிஞர் அப்துல் ரகுமானின் கஸல் கவிதைகள் யாப்...
-
நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல...
-
"Love is the law of God. You live that you may learn to love. You love that you may learn to live. No other lesson is required of Man&q...
-
ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வா...
-
ஒரு ஸென் குருவின் ஹைக்கூ: உதிர்ந்த இலை கிளைக்குத் திரும்புகிறதோ? வண்ணத்துப் பூச்சி. ஸென் கவிஞர் கூறுகிறார். “வண்ணத்துப் பூச்சி எனப்படும் இ...
-
எழுத்தாளர் சுஜாதாவின்,நாவல்கள்,சிறுகதைகள்,கட்டுரைகள்,கேள்வி பதில்கள் வரிசையில் அவரின் சிறுசிறு கதைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை.இவ் வகைக் க...
-
மழை பொழிந்துகொண்டிருக்கிறது. ஒரு நாளில்லை , இரண்டு நாளில்லை ஒரு வாரமாய கொட்டித்தீர்க்கிறது. எங்கும் வெள்ளக்காடு...! எனது சின்னப் பொ...
-
‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயல...