Tuesday, August 17, 2010

விலகிப் போகும் வாழ்க்கை


‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயலாமைகளும் மொழியாக உருவாகும்போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம்…..’




என்று நான் கூறவில்லை,’சல்மா’ என்கிற கவிஞரின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் அவர் கூறியது அது….




‘சல்மா’வின் கவிதைக்கு அறிமுகம் தேவையில்லை அவரது கவிதைகளிலேயே அது இருக்கிறது…‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பில் ஒரு கவிதை…


விலகிப் போகும் வாழ்க்கை


இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட
நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது



இப்படியே
நம் நண்பர்களை
நினைவூகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை

அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவூம்
பத்திரிகை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்


இந்த வாசலில்
மிகவூம் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகாளய்
அனுப்பப்படுகின்றன

அவர் பற்றிய குறிப்புக்கள்:தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா.பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன.இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்’,’நிகழ்’,’காலச்சுவடு’,’இந்திய டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியூள்ளன.இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும் ,இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு

Tuesday, August 3, 2010

மௌன மொழி


கனவுச் சிதறல்களில்
பட்டுத் தெறிக்கும்
உன் நினைவுப் பிம்பங்கள்….


வாழ்க்கை மரத்தின் வேர்கள்
எங்கு புகுந்துகொள்ளும்?
அல்லது
அது எத்திசைதான் கிளைவிடும்?

உலகம் சிலவேளைகளில்
காட்டுக் கூச்சல் போடும்
பலசமயங்களிலோ
மௌனமாய் வேடிக்கை பார்க்கும்

ரணமும் வேதனையும்
பின்னே தொடரும்
நிழல்போல

ஒரு சமயம்
என் ஆன்மா
தள்ளிநின்று என்னை
வேடிக்கை பார்த்தது
அது உன்னைப் பிரிந்துபோனகணம்
நிகழ்ந்தது….

எனக்குசிறகுகள் தந்தது
நீதான்!
ஆனால் திருப்பிக் கேட்கிறாய்
கீழே இறங்கு முன்னமே!

வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூடசுடுகின்றது …

நீ கருமையான பகல்
வெளிச்சமான இரவு

அமைதியான நீரோடைபோலிருக்கிறாய்
உனக்குள் இருக்கும் சுழலோ
வெளியில் தெரிவதில்லை

உன்னைத் தூர நின்று
ரசிக்கும் போது
நிலவைப் பார்த்து
பிரமித்துப்போகின்ற குழந்தையாய் நான்….

Popular Posts