Friday, December 31, 2010

சேமிக்க முடிந்திருந்தால்....?


கீழே நான் ரசித்த கனிமொழியின் கவிதைகள் ...



Thursday, December 2, 2010

80 நாளில் உலகம் - a Julus Vern's Novel





ஒரு தேர்ந்த எழுத்தாளனின் உலகப் பிரசித்தி பெற்ற நாவல் ஒன்றை வாசித்து முடித்துவிட்டேன்.’80 நாளில் உலகம்’ என்ற அந்த அழகிய நாவல் Julus Vern(France) என்ற எழுத்தாளரால் முதலில் பிரெஞ்சு மொழியில் ((Le tour du monde en quatre-vingts jours(French title)) எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் Around the World in 80 days’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது.

இந்நாவலில் Julus Vern இன் எழுத்துக்கள் கற்பனைகள் கலக்காத யதார்த்தமான சம்பவங்களின் தொகுப்பாக அமைந்துள்ளன.நாவலின் கதாநாயகன் Phileas Fogg உயர்ந்த பண்புகளைக் கொண்ட எத்துணை துன்பம் வரினும் தன் நேர்மையிலும் ஒழுங்கிலும் விட்டுக்கொடுப்பற்ற



தன்மையு
டன் விளங்கும் செயல் வீரனாகப் படைக்கப்பட்டுள்ளான்.

இந்தக் காலத்தில் ஒருவர் ‘இதோ இந்த உலகத்தைச் சுற்றி வருகின்றேன் பார்’ என்று புறப்பட்டால் அது ஒரு பெரியவிடயமாக இருக்கப் போவதில்லை.ஆனால் 18ம் நூற்றாண்டில் அது பெரிய விடயம்தான்.அதுவும் 80 நாட்களில் பயணம் செய்வது என்பது அந்த காலகட்டத்தில் மிகவும் ஆச்சரியமான விடயம்.

ஓரு பந்தயத்திற்காக ’80 நாட்களுக்குள் உலகைச் சுற்றி வருகின்றேன் என்று தனது குறிக்கோளில் உறுதியுடன் பயணிக்கும் செயல் வீரனின் கதை.Phileas Fogg பயணிக்கும் இடங்கள் அவற்றின் பூகோளச் சிறப்புக்கள்ääவித்தியாசமான கலாச்சாரங்கள் என்பவற்றை சிறப்பாக வெளிப்படுத்துதோடு அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களை மிகுந்த கவனத்துடன் கையாண்டு மொத்தத்தில் ஒரு சுவாரஷ்யமான நாவலாக பரிணமிக்க விட்டிருக்கிறார் நாவலாசிரியர்.
இந்தப் பயணம் இங்கிலாந்திலிருந்து தொடங்குகிறது பயணம் முடிவடையும் இடமும் ஆதே இடம்தான் பந்தயத்தில் வெற்றி பெற்றரா இல்லையா என்பதுதான் கதை.


இந்நாவலின் முதல் அத்தியாயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.மிகுதியைத் தொடராகப் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கின்றேன்….

அத்தியாயம் - 1
‘கணிதச் சுத்தம்’
1872ம் வருடத்திய இங்கிலாந்து இலண்டன் மாநகரில்ää பிரசித்தமான ஸாவில்லா வரிசையில்ääகுறிப்பிட்ட ஓர் இல்லம்.ஏழாம் நம்பர் வீடு அங்கே வசித்து வந்தார் ஸ்ரீமான் பைலீஸ் பார்க. ஆரம்பத்தில் அநேகமாக அவரைப் பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.தெரிந்த சிலருக்கும் ஸ்ரீமான் பைலீஸ் பாக் ஒரு நல்ல குணவான் என்று மட்டுமே தெரிந்திருக்க முடியும்.

பைலிஸ_க்கு அவருக்கே உரித்தான சில குணங்கள் இருந்தன. முpகக் கொஞ்சமாகவே பேசுவார். இந்த ஒரு தனிக்குணமே அவரைப் பார்ப்பவருக்கு ஒரு பெரும் புதிராக்கியது. எந்தவிதமான தொழிலிலும் அவர் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. வயாபாரப் பரிவர்த்தனை இடங்களிலோ! நீதி ஸ்தலங்களிலோ! வேறு எவ்விதமான தொழிலகங்களிலோ பைலீஸைச் சந்தித்தவரகள் கிடையாது.

நகரில் ஒரு பிரசித்த ‘சீர்திருத்தக் கிளப்’ உண்டு.அதில் பைலீஸ்பாக் ஓர் அங்கத்தினர். அவ்வளதுதான்.அவர் நல்ல பண்க்காரர்! எப்படி அவ்வளவு செல்வம் அவரை வந்து சேர்ந்தது என்பதும் புதிரே.இதைப்பற்றி அவர் யாரிடமும் எதுவும் பேசுவதும் கிடையாது. இயல்பாகவே அவர் பேசுவது என்பது மிக மிகக் குறைவுதான்.
அவர் பிரயாணம் செய்ததுண்டா என்று கேட்டால் அங்கேதான் நிறைந்த விசேஷம் இருக்கிறது.பைலிஸ_க்கு இருந்த உலக அறிவு – பூகோளத் திறனாய்வு - வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகம்தான். உலகத்தில் எந்த மூலையில் எந்த இடம் உள்ளது என்பதும்,அவ்விடத்தைப் பற்றிய விசேஷங்களும் அவருக்கு அத்துப்படி.நேரே போய்ச் சென்றிருக்கிறாரோ இல்லையோää படித்தறிந்து, எல்லா இடங்களுக்கும் அவர் மானசீகமாகச் சென்றிருக்க வேண்டியது உறுதி.

ஆனாலும், எத்தனையோ வருட காலமாக லண்டன் நகரை விட்டு, பைலீஸ் அந்தண்டை இத்தண்டை நகராமலிருந்தார். வெளியே சென்றாரானால் அவர் கிளப் ஒன்றுக்குத்தான் செல்வார்.அங்கே பத்திரிகைகள் படிப்பதும்ää நாலு பேருடன் சீட்டாடுவதும்தான் அவருடைய பொழுதுபோக்காகும்.ஆட்டத்திலும் அவர் பெரும்பாலும் சாதிப்பது மௌனம்தான். ஆட்டத்தின் வெற்றிää பைலீஸ_க்கு கொணரும் ஊதியத்தை அவர் தர்மத்துக்கே செலவிடுவார்.

வீட்டில் அவர் தனிமையே உருவானவர்.உறவினர் யாரும் கிடையாது. துpனசரி உணவு உட்கொள்வதெல்லாம் கிளப்பில்தான். அதிலும் அவருக்கென்றே சீரான தனி நியதி உண்டு.ஒரே அறை. ஒரே மேஜை. பெரும்பாலும் தனிமையாகவே! மொத்தத்தில் சொல்லப்போனால்ääபைலீஸ் பாக்கின் நடவடிக்கைகள் அனைத்திலும் தவறாத ஒரு கணிதச் சுத்தம் இருக்கும். அத்தனை ஒழுங்கு. கட்டுப்பாடு! வீட்டில் பாதி நேரமும் கிளப்பில் பாதி நேரமுமாக அவர் காலத்தைச் செலவிட்டார்.

வீட்டில் அவருக்கு உதவியாக ஒரு பணியாள் உண்டு.அவனும் ஒழுங்கும் கட்டுப்பாடும் உடையவனாகவே இருக்க வேண்டும்.இவ்விஷயத்தில் பைலீஸ் பாக் ரொம்பவும் கண்டிப்பானவர்.ஏன் அன்றுதான் அவர் தமது பணியாள் ஒருவனை வேலையை விட்டு ‘டிஸ்மிஸ்’ செய்திருந்தார்.காரணம் என்ன தெரியுமா? எஜமானார் ‘ஷேவிங்’ செய்து கொள்ளுவதற்காக வைக்க வேண்டிய சுடுநீரின் தன்மையை நிர்ணயி;த்து வைப்பதில் தவறிவிட்டான் அந்த அப்பாவி! எண்பத்தாறு டிகிரி உஷ்ணத்தில் வைப்பதற்குää எண்பத்து நான்கு டிகிரி உஷ்ணத்தில் சுடுநீரை அவன் அவர் முன் கொண்டுவந்து வைக்கலாமா?

ஆகவே அன்று காலை புதுப்பணியாள் ஒருவன் அவருக்கு சேவை செய்ய வந்தாக வேண்டும்.பைலீஸ்பாக் தமது நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்த வண்ணம் காத்திருந்தார். ஆரோகணித்துச் செல்லும் பட்டாளத்துச் சிப்பாய் மாதிரி இருந்தார் பைலீஸ். கடிகாரத்தின் நகரும் முட்களைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் கடிகாரப் படி பகல் பதினொன்றரை மணியானால், வினாடி கூடத் தாமதிக்காமல் பைலீஸ்பாக் கிளப்புக்குப் புறப்பட்டுவிடுவார்.

கதவை யாரோ லேசாகத் தட்டினார்கள்.பழைய பணியாள் ஒரு புதிய பணியாளைக் கொணர்ந்திருந்தான்.

புதியவனுக்கு முப்பது வயதிருக்கும். தலை தாழ்த்தித் தனக்கு எஜமானாராக இருக்கப் போகிறவருக்கு வணக்கம் செய்தான் அவன்.

“பிரெஞச்சுக்காரன்தானே நீ? உன் பெயர்?”- பைலீஸ் கம்பீரமாகக் கேட்டார்ää சுருக்கமாக.

வந்தவன் தன் பெயர் ஜீன் பாஸபர்டௌட் என்று சொல்லிவிட்டு மேலும் தொடர்ந்தான்: “எனது ஜீவனத்துக்காக நான் எத்தனையோ அலுவல்கள் பார்த்திருக்கிறேன்! ஸார்.ஆயினும் எனது நேர்மையில் அணுவளவும் எனக்குச் சந்தேகம் கிடையாது.தீ அணைப்புப் படையிலிகூடப் பணியாற்றிää எத்தனையோ பெரிய தீ விபத்துக்களைத் தடுத்திருக்கிறேன். இப்போது நான் ஏதாவது ஒரு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். தங்களுக்கு ஒரு பணியாள் தேவை என்று அறிந்து வந்திருக்கிறேன்.தாங்கள் தனிமையும் அமைதியும் விரும்புபவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இனியும் நான் என் பிழைப்புக்காக அலைய வேண்டியதில்லைääதங்களிடம் வேலை கிடைத்தால்!”

பைலீஸ_க்கு ஜீனைப் பிடித்துவிட்டது.

“சரி! என்னைப் பற்றிய விவரங்கள் உனக்குத் தெரியுமல்லவா?” என்று பைலீஸ் கேட்டார்.

“தெரியும் ஸார்!”

“சரி! இப்போது மணி என்ன?”

“பதினொன்று இருபத்தி ஐந்து” என்றான். ஜீன் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு பெரிய வெள்ளிக் கடிகாரத்தை வெளியில் எடுத்துப் பார்த்தபடி!

“உன் கடிகாரம் மெதுவாய் ஓடுகிறது” என்றார் பைலீஸ்.

“மன்னியுங்கள்! ஸார்! அப்படி இருக்க முடியாதே!” என்றான் ஜீன் பாஸர்டௌட் பணிவாக.

“நாலு நிமிஷம் மெதுவாய் ஓடுகிறது! சரி! இப்போது இந்த வினாடியிலிருந்து! அதாவது முற்பகல் பதினொரு மணி இருபத்து ஒன்பத்து நிமிஷத்திலிருந்து – அதாவது 1872ஆம் வருடம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி புதன்கிழமை முற்பகல் பதினொரு மணி இருபத்து ஒன்பது நிமிஷத்திலிருந்து – நீ என்னிடம் வேலையில் அமர்ந்திருக்கிறாய்!”- பைலீஸ்பாக்குக்கு எதுவும் கணிதச் சுத்தம்தான்! ஒழுங்குதான்!

சொல்லிவிட்டு அவர் வேறோரு வார்த்தையும் பேசாமல் எழுந்தார்ää இடது கையால் தொப்பியை எடுத்துத் தலையில் அணிந்தார். ‘விடுவிடென்று’ நகர்ந்தார் வெளியே.

வாசற்கதவு சாத்தப்பெற்ற ஒலி ஜீனுக்கு இருமுறை கேட்டது. முதல் முறை அவனது எஜமானார் வெளியில் சென்றார்.இரண்டாவது முறை பழைய பணியாள் வெளியில் சென்றான்.

ஆந்த பெரிய வீட்டில் ஜீன் தனியாக நின்றான்.
(தொடரும்……)

Monday, November 22, 2010

தவறுகள் ....









நான் விரும்பாவிடினும்

என்னைவிட்டு விலகா
என் நிழல் ....
முழு வாழ்க்கைக்குமாய்
நீள்கிறது
எளிதில் அழித்துவிடமுடியா
கறைகள்!

Wednesday, November 17, 2010

பச்சை தேவதை


பலசமயங்களில்
கவிதைகள்
எங்கினும் கனன்றுகொண்டேயிருக்கின்றன…
எப்போதும்,
அவை பூக்கள் போல் அல்ல…

‘பச்சை தேவதை’
சல்மாவின் கவிதைகள்

முன்னையதைப் போல் இல்லா
எல்லைமீறல்கள் அதிகம் !
இருப்பினும் வெகு இயல்பு…
எல்லாவற்றையும் மீறி
சில கவிதைகள்
மனதில் தரிக்கிறது
பகிர்வதில்
எனக்குத்
தயக்கம் இல்லை….

திசைபழகுதல்
யாருடைய ஆட்காட்டி விரலையோ
பற்றியபடிதான்
திசைகளை வகுக்கிறோம்
திசைபழகிய பிறகு
தன் கைநழுவுமாவென்கிற
தாளவியலாத எளிய பதற்றத்தில் சீர்குலைகின்றன
எல்லா உறவுகளும்

மௌனத் துரு
சொல்வாய் எனும் எதிர்பார்ப்பில்
இடைவெளியின்றி விழுந்து
நிரம்பிக்கொண்டிருக்கிறது
திடமான மௌனம்
எளிதாகவேயிருக்கிறது
வார்த்தைகளைப் பற்றிக்கொள்வதைவிடத்
துருவேறியிருந்தாலும் கூட
மௌனத்தைப் பற்றிக்கொள்வது


மரணக்குறிப்பு 1

அவன் கொல்லப்பட்ட நாளில்
மழை பெய்துகொண்டிருந்தது
பெரும் கருணையுடன்

கொல்லப்பட்டவனின் மனைவியிடம் படிகிறது
எதிர்வரப்போகிற
காலத்தின் தனிமை

வந்திருப்பவர்களுக்குச்
சிறந்த உணவொன்றினைத்
தயாரிக்கத் தொடங்கின
துக்கம் கலைந்த சில உறவுகள்

யாரிடமும்
வலுவாகப் பதியாத இழப்பு
ஒரு ரகசியச் செய்தியாய்
கூட்டத்தில் ஊருடுவி அலைகிறது

ஊருக்குப் போய்விட்டுத்
திரும்புவானென்கிற
எளிய நம்பிக்கை போதும்
குழந்தைகளுக்கு

விடியுமுன்
எஞ்சிய ஓலமும்
மழைநீரெனக் காய்ந்து
வீடு விறைப்புற்றுவிடுமென்பதைச்
சலசலக்கிற குரல்கள்
உறுதிப்படுத்துகையில்

அவனது மரணம்
என்னிடத்தில் இன்னொருமுறை நிகழ்கிறது






Saturday, November 13, 2010

ஸென் ஹைக்கூக்கள் - ஒரு பிரபஞ்ச ரகசியம்


ஒரு ஸென் குருவின் ஹைக்கூ:
உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி.

ஸென் கவிஞர் கூறுகிறார்.
“வண்ணத்துப் பூச்சி எனப்படும் இது என்ன? அது தன் ஆதார மூலத்திற்குத் திரும்பவும் ஒரு உதிர்ந்த இலையாகத் தன் உதிர்ந்த இலையாகத் தான் இருக்க வேண்டும்.”இவ்வகைச் சொல்லோவியங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

உதிர்ந்த இலை
கிளைக்குத் திரும்புகிறதோ?
வண்ணத்துப் பூச்சி.

உதிர்ந்த இலையொன்று வண்ணத்துப்பூச்சியாகப் பரிமாற்றம் அடைந்து மீண்டும் கிளைக்குத் திரும்பி உள்ளது.ஒவ்வொன்றுமே; ஆதார மூலத்திற்குத் திரும்புகின்றது.இதுவே இக்கவிதையின் விளக்கம்.நீ உனக்காக கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம்.ஆனாலும் ஒருவன் ஆதார மூலத்திற்கு திரும்பியே ஆகவேண்டும்.அந்த மூலத்தில்; நீ அண்டத்தோடு அந்தரங்கமாய்க் கலந்து விட்டாய்.ஒருவேளை அண்டத்தைக் காட்டிலும் நீ பிரமாண்டவன்.

மேற்குறித்த ஹைக்கூவிற்கான உரை ஓஷோவினுடையது.நல்ல கவிதைக்கு உரை தேவையில்லைதான்.கவிதை என்பது தானாகவே பேசுவது.எனினும் ஹைக்கூவின் பிறப்பிடமான ஸென் ஞானிகளின் அழகிய கவிதைகளிற்கு ஓஷோவை விடச் சிறப்பாக உரை எழுத ஒருவராலும் இயலாது.
ஓஷோ கூறுகிறார்.

"Haikus are paintings in words. ….They don’t say anything. They simply show somethings… Those words actually represent what they have seen”

எனவே கீழ் வரும் ஹைக்கூக்களை அதன் வழியில் மெதுவாக சென்று பாருங்கள்….
முழு நிலவு:
குளத்தைச் சுற்றி சுற்றி நான்
இரவு போயே விட்டது.


குயிலின் கூவல்-
அதைவிடச் சிறப்பாகச் செய்வதற்கேதுமில்லை
அந்த காட்டுச் செடிக்கும்தான்.

தும்பியொன்று பாறையின் மீது
நண்பகற் கனவுகள்.

ஒரு பனிக்காலச் சூறைக்காற்று
மூங்கில்களுக்கிடையில் மறைந்து
அமைதியில் ஒடுங்குகிறது.

நீயாய்த்தான் விழி மலரவேண்டும்
நிலவொளியில் குளிக்கும்
நீள்வரி-மலர்களை தரிசிக்க.
(நீள்வரி மலர்கள்: மூங்கில் மலர்கள்)

மலையுச்சிக்குச் செல்லும் பாதையை
அறிய விரும்பினால் நீ கேட்க வேண்டும்
அங்கு போய்த் திரும்பி வந்த மனிதனையே.

கணப்பைச் சூழ்ந்து-
நம்மை வரவேற்கும் புன்னகையே
வழியனுப்பவும் செய்கிறது!

பட்டாம்பூச்சிகள் அன்போடு தொடர்கின்றன-
மலர்வளையம்
சாத்தப்பட்டுள்ளது சவப்பெட்டியின் மேல்.

நீரில் அந்நிலவு
உடைகிறது மீண்டும் உடைகிறது
ஆயினும் அது முழுமையாய்.

புழமையான குளம்
தவளையொன்று குதிக்கிறது
மீண்டும் மோனம்.

நதி.
நீண்டதொரு கோடு
பனிவயல்களின் ஊடே.

ஹைக்கூ பூக்கள் மீண்டும் மலரும் அடுத்த வலைப் பூவில்….


Monday, October 25, 2010

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்......





ஹைக்கூ என்கிற ஜப்பானிய கவி வடிவம் உலகப் பிரசித்தமானது.தமிழில் ஏராளம் ஹைக்கூக்கள் எழுதப்படுகின்றன… அழகிய மூன்று வரிக்கவிதைதான் ஹைக்கூ! அது வானவில் போன்றது..அதன் கண நேர அனுபவத்தைப் படிப்பவர்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

பெரும்பாலும் தமிழில் எழுதப்படும் ஹைக்கூக்கள்; அதன் அடையாளத்தைத் தொலைத்துவிட்டனவாகவே உள்ளன.அதற்காக உண்மையான ஹைக்கூ என்பது இதுதான் என்று நானே அதை நீட்டி முழங்காமல் சுஜாதாவின் ‘ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்’ நூலைத் துணைக்கழைக்கிறேன்.(மேலே எழுதிய ஹைக்கூக்கள் என்னுடைய சிறிய முயற்சி)

இனி சுஜாதாவினுடைய விளக்கத்திற்கு வருவோம்….

நள்ளிரவில்
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சாத்தப்பட்டது.

மேலே குறித்த மூன்று வரிகளைப் படித்ததும் உங்கள் மனதில் எழுந்த நினைவுகள் என்ன? உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியை விவரிக்கும் வெறும் வரிகள்தாம்.ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள் விரிவதை கவனிக்க முடியும்.நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்க வேண்டும்.அவன் தனிமை வெளிப்படுகிறது.அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? ஏன் விழித்திருக்கிறான்.எங்கே விழித்திருக்கிறான்.நகரத்திலா… கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது அத்தனை நிசப்தம்.நகரத்தில் ஏது?அத்தனை நிசப்பதம்? தூரத்தில் கதவு சாத்துவதைக் கேட்க முடியும் சப்தம். அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன…? அந்த வேளைக்கு வீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா? ஒரு மனைவியா? ஒரு மகனா? வயசுக்கு வந்த பெண்ணா…? அல்லது யாராவது கோபத்தில் வீட்டைவிட்டு வெளியே செல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள்.அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனை பாருங்கள்.ஒஸாகி ஹோஸாய் என்கிற நவீன ஜப்பானிய கவிஞரின் ஹைக்கூ இது.

உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில் எறியப்படும் சிறிய கல் ஹைக்கூ.
நம் தின வாழ்வில் ஆச்சரியகரமான வசீகரமான பரவசமான சோகமான கணங்கள் பலப்பல உள்ளன.காலை நடந்து செல்லும்போது குட்டி நாய் உன்று உங்களைப் பார்த்து வாலாட்டுகிறது.அல்லது ஜன்னல் வழியாக ஒரு குழந்தை எட்டிப் பாரத்துச் சிரித்துவிட்டு டாட்டா காட்டுகிறது.பஸ்ஸில் ஒரு இளம் பெண் உங்களை அதிகப்படியாகப் பார்க்கிறாள்.முற்றிலும் அன்னியர் ஒருவர் ஓடிவந்து பஸ் கிடைத்த சந்தோஷத்தில் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார்.திடீர் என்று காய்ந்த சருகுகளை குப்பைத் தொட்டியில் போட்டுக் கொளுத்தும்போது மூக்கில் படரும் வாசனை உங்களுக்குப் பிடித்திருக்கிறது.அலுவலகத்து மாடிப்படியில் ஒருவருடன் மோதாமல் தப்பிக்கிறீர்கள்.அல்லது மோதிக்கொண்டு லேசாக நெற்றியில் வலிக்க தடவிக்கொள்கிறீர்கள்.இவ்வாறு எத்தனை கணங்கள் ! உன்னதக் கணங்கள்! சின்ன சின்ன இன்ப துன்பங்களை நமக்கு இறைவன் பரிசுப் பொருட்கள் போல தினம் தினம் கிடைக்கின்றன.

ஹைக்கூ எழுதுவதும் படிப்பதும் இவ்வகையான கணங்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதுதான்.அனுபவம் உணர்வு இரண்டையும் பிறருக்கு தர முயல்வதுதான் ஹைக்கூ.

சொல்லப் போனால் கலை இலக்கியம் எல்லாவற்றுக்குமே இதுதான் குறிக்கோள்.கலைஞனும் கவிஞனும் தமக்குக் கிடைத்த அனுபவங்களை வரைந்தோ,எழுதியோ மற்றவர்களுக்குச் சொல்வதுதான்… அந்த அனுபவ வார்ப்புக்கள் சில சமயம் நேரடியாக இருக்கின்றன;சில சமயம் மறைமுகமாக உயிர் வாழ்தலில் உள்ள சிலிர்ப்புக் கணங்களை உன்னதங்களை நாம் எத்தனையோ முறை கண்களில் வெளிப்படுத்துகிறோம்.விளையாட்டு வீரன் வெற்றி பெறும்போது துள்ளிக் குதிக்கிறான்.அல்லது கையை உயர்த்தி வானில் குத்துகிறான்.வியப்பில் புருவங்களை உயர்த்துவது சட்டென்று வாய் திறப்பது,அட என்று வியப்பது,கை தட்டுவது போன்ற அத்தனையும் ஒரு உன்னதக் கணத்தை சந்தித்ததன் வெளிப்பாடுகள்தான்.இவைகளில் ஹைக்கூவும் ஒன்று.
ஹைக்கூ என்பது ஜப்பானிய வார்த்தை.இப்போது சர்வதேச வார்த்தையாகி அத்தனை அகராதிகளிலும் இடம்பெற்றுவிட்டது.அதனால் இந்த வார்த்தையை தமிழிலும் சேர்த்துக்கொள்வோம்.சிறுகவி.கடைசி உகரம் சற்று நீண்டது.குறிலில் எழுதினாலும் பாதகமில்லை.

ஹைக்கூ என்பதற்கு அர்த்தம் என்ன? சேம்பர்ஸ் அகராதி 5,7,5 அசைகள்
;(syllables) கொண்ட ஜப்பானிய கவிதை என்கிறது.இது வெறும் வார்த்தை வருணனை.ஹைக்கூ ஒரு அனுபவம்.தனியே இருக்கும்போது வானத்திலோ ,வீதியிலோ , வீட்டிலோ ஒரு விந்தையான சமாச்சாரத்தைப் பார்த்ததும் உடனே தெரிந்தவரைக் கூப்பிட்டு, ‘அட ! இதை வந்து பாரு’ என்று சொல்கிறோமேääஅதுபோல் ஒரு அனுபவப் பங்கீடு.வியப்பு என்பதை மற்றவருக்கு சுட்டிக் காட்டும் விருப்பமே ஹைக்கூ.

அப்படிச் சுட்டிக்காட்டும் வடிவம் கவிதை.ஒரு சிறிய பூப்போன்ற மூன்று வரிக் கவிதை.ஒரு ஹைக்கூ எழுதும்போதுää”எனக்கு ஒரு அனுவம் ஏற்பட்டது.அதை உன்னுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.அந்த அனுபவத்தைää என்னில் ஏற்படுத்திய சம்பவத்தை மட்டும் உனக்குச் சொல்கிறேன்.அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்கு ஏற்படுகிறதா பார்” என்று சொல்கிறோம்.
அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ.ஒரு சில வார்த்தைகள் மூலம்:

முன்பனி இரவில்
யாத்ரிகனின்
ஊசி நூல் தையல்

கொ ப யாஷி இஸ்ஸா என்ற 18ம் நூற்றாண்டுக் கவிஞனின் இந்த ஹைக்கூ மூன்று நூற்றாண்டுகளைக் கடந்து எத்தனை உணர்ச்சிகளைக் கடத்துகிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

இரவில் விளக்கு வெளிச்சத்தில் ஊசி நூலால் தைக்கும் ஒருவனைப் பார்க்கிறோம்.அவன் தனிமையானவன்.அவனுக்கு மனைவியோ மகளோ உடன் இருந்தால் எதற்காக கிழிந்த துணியை திரும்பத் திரும்ப தைக்கும் அளவுக்கு ஏழை அவன்… அவ்வப்போது அவன் தையல் ஊசி விளக்கு வெளிச்சத்தில் மின்னுகிறது.
எத்தனை படிமங்கள் மூன்று வரியில்!

இதேபோல் கீழ்க்காணும் வரிகளையும் யோசித்துப் பாருங்கள்:
என் தொப்புளில்
ஒரு கடல்துளி
அதில் பிரதிபலிக்கும்
விளையாட்டரங்கம்!
சாயங்கால இருட்டு
கதவோர மலர் வளையம்
காற்றில் எழுகிறது
சாக்கடையில்
மிதக்கும் முகமூடி
மெல்லத் தலையசைக்கிறது!

ஹைக்கூ எழுதியவனின் அனுபவமும் அதைப் படிப்பவரின் அனுபவமும் ஒத்துப் போக வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.அவரவர் நினைவுகளுக்கு ஏற்ப ஹைக்கூ தரும் அனுபவம் வேறுபடலாம்.முன்பனி இரவில் யாத்ரிகனின் ஊசி நூல் நான் குறிப்பிட்டதை போலில்லாமல் உங்களுக்கு வேறு வித ஞாபங்களைத் தரலாம்.நீங்கள் பார்த்த யாத்ரிகர்கள்ääஊசி நூல்ääமுன்பனி எல்லாமே படிம அளவில் வேறுபடலாம்.

முக்கியம் ஹைக்கூ சிறிய எளிய வரிகள் தரும் நீண்ட சிந்தனைத் தொடர்.இந்த சிந்தனைத் தொடரை அதிகம் சிறைப்படுத்தாமல் இருக்கவே ஹைக்கூவின் வரிகள் எளிமையாகவும் சிறியதாகவும் உள்ளன.
ஹைக்கூ ஒரு நெருப்புக் குச்சி.

மனமென்னும் மருந்துச் சரத்திற்கு அருகே உரசப்படும் சிறய நெருப்புத் துண்டு.
மேலும் நம்மைப் பாதிக்கும் சிறிய,அந்தரங்க விஷயங்களை பிறருடன் ஹைக்கூ மூலம் பகிர்ந்துகொள்ளும்போது நம் அந்தரங்க உலகில் அவர்களை அனுமதிக்கிறோம்.எனக்குக் கிடைத்த எண்ணங்கள் உனக்கும் ஏற்படும்போது நானும் நீயும் ஒன்றாகிறோம்.

ஹைக்கூ உனக்கும் எனக்கும் ஒரு சின்னப் பாலம்.

Wednesday, September 1, 2010

நினைவால் ஒரு பயணம்



சில கவிதைகளை
எழுதுவதில் தோற்றுப்போய்
இன்னோரிடத்தில் பிரமிக்கின்றேன்
ஒரு வாசகனாய்,
சல்மாவின் கவிதைகளில்
....

நினைவால் ஒரு பயணம்


குழம்பிய என்னுள்
நீ விட்டுச் சென்ற
நினைவுகள்
அடர்ந்து படரும்
நானில்லாத பொழுதுகள்
என் அறையில் படரும் தூசிபோல

அன்றாடப் பொழுதின்
முதல் கசப்பை
நான் விழுங்கிச் செரிக்கவும்

எங்கோ நிகழும் மரணம்
ஏற்படுத்தும் இன்மையின் பீதியை
இல்லாமல் செய்வதும்
உன் நினைவுதான்

இன்று மாலை வந்துசென்ற
வானவில்லைப் பார்க்காமல் போனதில்
எனக்கு வருத்தங்களில்லை

நேற்றைய எனது பயணம்
வழமையான
அசௌகர்யங்களோடிருந்தாலும்
எளிதாய் மாறியது உன் நினைவுகளால்தான்

உனது பிரியங்களின்
அருகாமையில் அமைதியிறும்
எனது பெரும் துயரங்கள்

நிலவூ இரக்கமற்று பிரகாசிக்கும்
இந்த இரவு
இன்று உருவாக்கும் தனிமை
எப்போதை விடவும் கடுமையானது

இலக்கை நோக்கிப் பாயும் நதியாய்ப்
பெருகும் எனது தவிப்புகள்
போய்ச் சேரும் உன் நினைவுகளுக்கு

இருந்தும்
உன் அருகாமை வேண்டிப் பெருகும்
தாபம் கரைக்க
வெறும் நினைவுகள் மட்டும்
போதுமானதாயில்லை

Tuesday, August 17, 2010

விலகிப் போகும் வாழ்க்கை


‘கவிதை எழுதுவது குறித்து அவரவர்க்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம்.எனக்கோ இது வேறெதையும் விட ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.தோல்விகளும் இயலாமைகளும் மொழியாக உருவாகும்போது ஏதோ ஒரு நிம்மதி. அது பாவனையாகவும் இருக்கலாம்…..’




என்று நான் கூறவில்லை,’சல்மா’ என்கிற கவிஞரின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் அவர் கூறியது அது….




‘சல்மா’வின் கவிதைக்கு அறிமுகம் தேவையில்லை அவரது கவிதைகளிலேயே அது இருக்கிறது…‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ தொகுப்பில் ஒரு கவிதை…


விலகிப் போகும் வாழ்க்கை


இன்றும்
ஒருவரை
என்னை விட்டு
வழியனுப்ப நேர்கிறது
நேற்றும்
அதற்கு முன்பும் கூட
நீங்கள்
நினைப்பது போல
இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல

ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தைக் கனக்க வைக்கிறது



இப்படியே
நம் நண்பர்களை
நினைவூகளை
சிந்தனைகளை
தினமும்
ஏதேனும் ஒன்றை
வழியனுப்பிக்கொண்டிருப்பதை
நீங்கள் யாரும்
ஆழமாய் அறிவதில்லை

அதனாலேயே
உங்களால்
சிரித்த முகத்துடன் இருக்கவூம்
பத்திரிகை படிக்கவும் முடிகிறது

நானோ
பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்


இந்த வாசலில்
மிகவூம் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறேன்

ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச்செண்டுகாளய்
அனுப்பப்படுகின்றன

அவர் பற்றிய குறிப்புக்கள்:தமிழில் எழுதிவரும் குறிப்பிடத்தக்க இளம் கவிஞர் சல்மா.பெண் கவிதை மொழி சார்ந்து இவரது படைப்புகள் புதிய தடங்களை உருவாக்குபவையாக உள்ளன.இவரது கவிதைகள் ‘சுட்டும் விழிச்சுடர்’,’நிகழ்’,’காலச்சுவடு’,’இந்திய டுடே’ முதலிய இதழ்களில் வெளியாகியூள்ளன.இவரது பெரும்பாலான கவிதைகள் ஆங்கிலத்திலும் ,இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டு

Tuesday, August 3, 2010

மௌன மொழி


கனவுச் சிதறல்களில்
பட்டுத் தெறிக்கும்
உன் நினைவுப் பிம்பங்கள்….


வாழ்க்கை மரத்தின் வேர்கள்
எங்கு புகுந்துகொள்ளும்?
அல்லது
அது எத்திசைதான் கிளைவிடும்?

உலகம் சிலவேளைகளில்
காட்டுக் கூச்சல் போடும்
பலசமயங்களிலோ
மௌனமாய் வேடிக்கை பார்க்கும்

ரணமும் வேதனையும்
பின்னே தொடரும்
நிழல்போல

ஒரு சமயம்
என் ஆன்மா
தள்ளிநின்று என்னை
வேடிக்கை பார்த்தது
அது உன்னைப் பிரிந்துபோனகணம்
நிகழ்ந்தது….

எனக்குசிறகுகள் தந்தது
நீதான்!
ஆனால் திருப்பிக் கேட்கிறாய்
கீழே இறங்கு முன்னமே!

வார்த்தைகள் மட்டுமல்ல
மௌனம் கூடசுடுகின்றது …

நீ கருமையான பகல்
வெளிச்சமான இரவு

அமைதியான நீரோடைபோலிருக்கிறாய்
உனக்குள் இருக்கும் சுழலோ
வெளியில் தெரிவதில்லை

உன்னைத் தூர நின்று
ரசிக்கும் போது
நிலவைப் பார்த்து
பிரமித்துப்போகின்ற குழந்தையாய் நான்….

Thursday, July 8, 2010

நிலாப் பார்த்தல்


நிலவை விரும்பாதர்வகள் அதனை ரசிக்காதவர்கள் யாராவது இருப்பார்களென நான் நினைக்கவில்லை.சில மாதங்களிற்கு முன் வாசிக்கக் கிடைத்த இந்தக் கட்டுரையில் அழகாக நிலவைப் பார்த்து ரசிக்கும் அனுபவத்தை அளிக்கின்றார்.அறிமுகம் தேவையில்லை இந்தக் கட்டுரைக்கு.’கதா விலாசம்’ என்ற புத்தகத்தில் உள்ளது இது… பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் இந்த புத்தகத்தைப் பற்றி பார்ப்போம்… இப்போது இதை வாசித்துப் பாருங்கள்.


மனிதன் நிலவுக்குப் முதன் முதல் பயணம் செய்து கால் நுற்றாண்டைக் கடந்விட்டோம்,ஆனாலும் இன்று வரை...


திடீரென உலகம் ஒரு நெல்லிக்காயை விடவும் சிறியதைப் போலச் சுருங்கி விட்டது போன்று தோன்றுகிறது.தொலைவு என்பதைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் போய்விட்டது.காரணம்,மின்சாரமும் நவீன விஞ்ஞான சாதனங்களின் வளர்ச்சியும் நம் இருப்பிடத்துக்குள் உலகைச் சுருக்கிட்டு இழுத்து வந்துவிட்டன.


தண்ணீரை விடவும் மின்சாரம் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது.மின்சாரமில்லாத வாழ்வைப் பற்றி நினைவுகொள்வது கூட அர்த்மற்றதாகிவிட்டது!


ஆனாலும் மின்சாரம் நுழையாத காலத்தின் இரவுகள் தந்த நெருக்கமும்,அரிக்கேன் விளக்கொளியிலிருந்து கசிந்து வரும் மஞ்சள் திரவம் போன்ற வெளிச்சமும் மனதின் மூலையில் அப்படியே படிந்து போயிருக்கின்றன.அந்த நாட்களில் சிறுவர்களுக்கு இருந்த ஒரே விளையாட்டு நிலா பார்த்தல்! இரவானதும் நிலா எங்கேயிருக்கிறது,எந்தப் பக்கம் போகிறது என்று அண்ணாந்து பாhத்தபடி,அதைத் தன் கூடவே கூட்டிக்கொண்டு தெருத்தெருவாக அலைவது ஒரு தீராத விளையாட்டு!


தெருவில் இருந்த அத்தனை பையன்களும் தங்களோடு ஒரு நிலவை தன் வீட்டுக்கு கூடவே கூட்டிப்போவதும் வழியில் அது மேகத்தில் மறைந்தபோது அங்கே நின்று நிலவை வெளியே வரும்படி கூப்பிட்டுக் கத்தியதும் எல்லா இரவுகளிலும் நடந்தேறியது.அந்த நாட்களில் வானில் ஒரேயொரு நிலவுதான் இருந்தது என்று எவராவது சொன்னால்,யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.


நான் என் வீட்டுக்கு கூட்டிவந்த நிலவு என் ஜன்னலுக்கு வெளியில்தான் நின்றிருந்தது.அதுபோல இன்னொரு நண்பன் அவனது நிலவை தன் வீட்டுக்குக் கூட்டிப் போயிருப்பான்.இப்படி எத்தனை சிறுவர்கள் கிராமத்தில் இருந்தார்களோ,அத்தனை நிலவுகள் இருந்தன.


நிலா வராத நாட்களில் நட்சத்திருங்களை ஆகாசத்திலிருந்து பறிப்பதற்காகக் கிறுகிறுவென தட்டாமாலை சுற்றுவோம்.நிலா முற்றிய நாட்களில் அதன் பால் வெளிச்சம் தெருக்களை,வீடுகளை குளிர்மை செய்யத் துவங்கும்.தெருவில் பாயை விரித்து தூங்குபவர்கள் யாரோ தங்களை நெருக்கமாக நின்று பார்த்துக்கொண்டு இருப்பது போல வெட்கமடைவார்கள்.அது போனற நாட்களில் கல் உரல்களில் தேங்கி நிற்கும் நிலா வெளிச்சத்தை ஆசையோடு நாய்கள் நக்குவதைக் கண்டிருக்கிறேன்.


நிலா பார்த்தல்,தாயின் இடுப்பில் அமர்ந்த நாளில் துவங்கி இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.பால்யத்தில் என் வீடு வரை கூட்டி வந்த நிலவு இன்றும் எனது பயணத்தில் எப்போதும் கூடவே வந்துகொண்டு இருந்தது.எந்த ஊருக்குப் போகும்போதும் தெரிந்த நபர் கூட இருப்பது போல ஒரு நெருக்கம் கூடிவிடுகிறது.


கையில் காசில்லாமல் சுற்றியலைந்த நாட்களில் கர்நாடக மாநிலத்தின் பட்டகல்,பதாமி என்ற இடங்களில் உள்ள புராதன கோயிலையும் சௌந்தர்யமிக்க சிற்பங்களையும் பார்த்துவிட்டு,பீஜப்பூரை நோக்கி லாரியில் பயணம் செய்ய நேர்ந்தது.டிசம்பர் மாதத்தின் இரவு என்பதால் நட்சத்திரங்கள் சிதறிக் கிடந்தன.மேகம் இருண்டிருந்தது.லாரியில் ஓட்டுநரும் இரண்டு உதவியாளர்களும் முன்னால் இருந்ததால் என்னையும் இன்னொரு வயதான நபரையும் பின்னால் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள்.அந்த லாரியில் சிமென்டு மூட்டைகள் ஏற்றப்பட்டிருந்தன.
லாரியில் ஏறியதும் தூங்கிவிட வேண்டியதுதான் என்று சுருண்டு படுத்தேன்.ஆனால்,குளிர்காற்றும் திறந்த ஆகாசமும் தூக்கத்தை நெருங்கவிடாமல் செய்தன.குளிர் தாங்கமுடியாமல் உடல் நடுங்கத் துவங்கியது.உட்கார முடியவில்லை.
என் மீதே எனக்குக் கோபமாக வந்தது.எதற்காக இப்படிக் காரணமில்லாமல் அலைந்துகொண்டு இருக்கிறேன்? எனக்கு என்னதான் வேண்டும். ஏன் இப்படி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்? ஏன யோசனை நீண்டு விரிய விரிய… என் மீதான ஆத்திரம் அதிகமாகக்கொண்டு இருந்தது.


குளிரில் நடுங்கியபடி கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு ஆகாயத்தைப் பார்த்தபடியே வந்தேன்.லாரி ஒரு மலைப்பாதையில் செல்லத் துவங்கியபோது,பள்ளத்தாக்கின் மீது ஒரு பருந்து வட்டமிடுவது போல தனியே மிதந்துகொண்டு இருந்தது நிலா.அது பௌர்ணமியின் மறுநாள் போலும்.மரங்களும் பாறைகளும் ஏன் அந்த மொத்த நிலப்பரப்பே வெண்ணிற வெளிச்சத்தின் சல்லாத்துணியை போர்த்திக் கொண்டு இருப்பது போலிருந்தது.
இரவு எத்தனை அழகானது என்பதை அந்த இரவில்தான் தெரிந்து கொண்டேன்.ஏதோ என் வீட்டின் வாசலில் கயிற்றுக்கட்டிலை போட்டுப் படுத்துக்கொண்டு நிலவைக் காண்பது போல அத்தனை நெருக்கம் கூடியது.அத்தோடு அதுவரை அழுத்திக்கொண்டு இருந்த எண்ணங்கள் கரைந்துபோய் இது போல ஒரு காட்சியைக் காண்பதற்கு கிடைத்த சந்தர்ப்பம் எத்தனை பேருக்கு கிடைக்கப்போகிறது என்று மனது சந்தோஷத்தில் பொங்கியது.

குழந்தைகள் நிலவை பார்த்துப் பாடுவது போல சத்தமாகப் பாட வேண்டும் போலிருந்தது.தானறியாமல் வாய் ஒரு பாடலை முணுமுணுக்கத் துவங்கியது.லாரியில் இருந்தபடி எழுந்து வட்டம் சுற்ற வேண்டும் என்று நினைத்தேன்.அருகில் சுருண்டுகிடந்த நபர் வேடிக்கையாக என்னையும் நிலவையும் பார்த்தார்.

இதே நிலவைத்தானே சிறுவயதிலிருந்து துரத்துகிறேன்.இந்தச் சந்திரன்தானே என் வீட்டுக் கிணற்றில் வீழ்ந்து கிடந்தது.கனவுகள் சூழ நான் உறங்கிக் கிடந்தபோது என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது இந்த நிலவுதானே! ஏனோ ஆகாசமும,நட்சத்திரமும்,நிலவும் திடீரென கைதொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது போலிருந்தது.


லாரியில் நன்றாகப் படுத்துக்கொண்டேன்.என் தலைக்கு மேலாகக் கூடவே வந்து கொண்டு இருந்தது நிலா.புகை போல குளிர் நிரம்பிய பாதைகளில் லாரி கடந்து சென்றுகொண்டு இருந்தது.உலகில் ஒரேயொரு மனிதனும் ஒரு நிலவும் மட்டுமே விழித்திருக்கிறோம் என்பது போல நிலாவைக் கூடவே அழைத்துச் சென்றுகொண்டு இருந்தேன்.விடிகாலையின் மணம் காற்றில் படரத் துவங்கியபோது,திடீரெனத் தோன்றியது…
விட்டிலிருந்து வெளியேறித் துறவியாக அலைந்த நாட்களில் கௌதம புத்தரும் இதே நிலவைத்தானே பாரத்திருப்பார்! என்றால் இந்த நிலவு புத்தரின் தோழன் இல்லையா?


சங்க இலக்கியத்தில் வரும் பாணன் தன் காட்டு வழியில் கண்டதும் இதே நிலவுதானே? சிறைச்சாலையின் ஜன்னல் வழியாக பகத்சிங் இதே நிலவைப் பார்திருப்பார் அல்லவா? காலத்தின் காட்சியின் பெயர்தான் நிலவா? மனதில் இருந்த கசடுகள்,வலிகள் யாவும் கழுவித் துடைக்கப்பட்டுவிட்டன போலானது.
பொழுது புலர்ந்து,முதல் வெளிச்சத்தின் கீற்றுகள் வானில் தோன்றத் துவங்கியபோது நிலா மேற்கில் கரை தட்டி நின்ற படகைப் போல அசைவற்று அப்படியே நின்றிருந்தது.
ஓரிடத்தில் லாரி நின்றபோது கீழே இறங்கினேன்.சூரியன் உதயமாகியிருந்தபோது,மெதுவாக நிலா மறைந்துகொண்டு இருந்தது.என் கூடவே நிலவு துணைக்கு வரும்வரை எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று வர முடியும் என்று மன தைரியம் உண்டானது.அதன் பிறகு இன்றுவரை ரயிலில்,பேருந்தில்,கார்களில் பயணம் செய்யும்போது,நிசப்தமாக ஒரு மீன் தண்ணீரில் நீந்துவது போல நிலவு தொலைவில் அலைவதைப் பார்த்தபடி நீள்கிறது பயணம்.


தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு யாவரும் மொட்டைமாடியில் உறங்க வேண்டியதாகியது.நகரத்துக்கு வந்த பிறகு குழந்தைகள் முதன் முறையாக நிலா பார்த்தபடி உறங்கும் முதல் நாள் அது.நட்சத்திரங்களையும்,நிலவையும்,வழி தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக் கிடந்தோம்.ஏதாவது கதை சொல்ல வேண்டும் என்று பையன் கேட்டதும் என் நினைவில் வந்த கதை பி.எஸ்.ராமையாவின் நட்சத்திரக் குழந்தைகள்.
இக்கதையை எனது கல்லூரி நாட்களில் வாசித்திருக்கிறேன்.ஒரு கூழாங்கல் தண்ணீருக்குள் அமிழ்ந்து கிடப்பது போல இன்று வரை ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது.


பி.எஸ்.ராமையா மணிக்கொடி இதழை நடத்தியவர்.சிறந்த சிறுகதையாசிரியர்.அவரது இக்கதை சிறந்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகள் யாவிலும் இடம்பெற்றுள்ளது.நட்சத்திரக் குழந்தைகள் கதையில் ரோகிணி என்ற ஆறு வயதுச் சிறுமியும் அவளது அப்பாவும் ஒரு நாள் ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.நட்சத்திரங்களுக்கு அப்பா இருக்கிறாரா என்று ரோகிணி கேட்கிறாள்.சுவாமிதான் நட்சத்திரங்களுக்கு அப்பா என்று பதில் சொல்கிறார்.உடனே சிறுமி கேட்கிறாள்… ‘சுவாமி உன்னைப் போல அழகாக இருப்பாரா அப்பா?’ அவரும்,’சுவாமியைப் போல அழகானவர் உலகத்திலேயே வேறு யாரும் கிடையாது!’ என்கிறார்.ரோகிணி அதை ஆமோதிப்பது போல சொல்கிறாள்… ‘அதனால்தான் நட்சத்திரங்கள் இத்தனை அழகாக ஜொலிக்கின்றன!’ அப்போது ஒரு நட்சத்திரம் எரிந்து கீழே விழுகிறது.அதைக் கண்ட சிறுமியின் தந்தை ‘யாராவது பொய் சொல்லிவிட்டால் ஒரு நட்சத்திரம் இப்படி உதிர்ந்து விழுந்துவிடும்!’ என்கிறார்.இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு இரவில் வானத்திலிருந்து எரிந்து விழும் நட்சத்திரம் ஒன்றைக் கண்டு வேதனை தாங்க முடியாமல் ரோகிணி அழுகிறாள்.அப்பா சமாதானப் படுத்தும்போது.’நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள் அப்பா.
ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போனால் கடவுள் எவ்வளது வேதனைப்படுவார் அதை நினைத்துத்தான் வருத்தப்படுகிறேன்!’ என்கிறாள் குழந்தை.குழந்தையின் மனதும்,வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத துக்கமும் கொண்ட கதை இது.எப்போதாவது பின்னிரவில் விழித்துக்கொண்டு ஜன்னலைத் திறந்து பார்க்கும்போது சொந்த ஊரை நினைவுபடுத்துகிறது நிலா.குற்றவாழியைப் போல்.
பொய் சொல்வதால் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் என்பது உண்மையாக இருந்தால்.இன்று வானில் ஒரு நட்சத்திரம் கூட இருக்காது.ஆனாலும்,இக்கதையை வாசிக்கும்போது, கடவுளுக்காக குழந்தையைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

Tuesday, June 29, 2010

18 வயசுல




நம் ஒவ்வொருவரது வாழ்க்கையின் ஞாபகப் பதிவுகளில் இன்னும் பசுமையாக இருக்கின்றது "18 வயது’… பருவத்தின் விளிம்பில் மன அலைகள் கட்டுக்கடங்காமல் கரைபுரண்டோடும்… காதல் துளிர்விடும் நட்பு பலம்பெறும் எதுவும் அழகாய்த் தெரியும்… பார்க்கும் யாவும் கவிதையாகும்,உதடுகளில் உதிர்ந்து விழும் பாடல் வரிகள்… பூக்கள்,நிலவு,காற்று கடற்கரை இவைகளைப் பொறுமையாய் ரசிக்கும் மனம்… பா.விஜயின் ‘18 வயது’ நமது ஞாபங்களையும் மீட்டிப்போகிறது இங்கே….

18 வயசுல

கொலுசு உன் கால்களோடு
போய்விட்டது
சத்தம் மட்டும் என் காதுகளோடே
வருகிறது

எண்ணெய் அப்பிய
ரெட்டை ஜடையில் சிக்கி
வழுக்குது
மல்லிகைப் பூவும் என் மனசும்…

பெரிய தலைகாணிக்கு போட்ட
சின்ன தலைகாணி
உறை போல்உன் உடை

பாஸாக வேண்டும் என்று
கோயில் சுவற்றில்
இருவருமே பேர் எழுதினோம்.
நீ மட்டும் பாஸானாய்
சாமி கூட உன்னை மட்டும்தான் பார்க்கிறது

கம்பெனி சைக்கிளில் போகும் உனை
வாடகை சைக்கிளில் தொடர்வேன்
உன்னை சமீபிக்கையில்
அறுந்து போகும்செயினும் என் தைரியமும்

பேச முடிவதேகொஞ்ச நேரம்தான்
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு வரக்கூடாதா?

குனிந்தபடி கிணற்றில் நீ
தண்ணீர் மொண்டு போய்விடுவாய்
வாளியில் தொங்கிக் கொண்டிருக்கும்
திருட்டுத்தனமாய் சிந்திய புன்னகை

ரோஸ் ஐஸ் சாப்பிட்டு
வாய் சிவக்க நிற்பாய்
நிறமாற்ற விதி என்பது
இயற்பியல் அல்லஇதழியல்
சின்ன வயசில்
நிறையசிலேட்டு குச்சிகளை முழுங்குவேனாம்
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம் உன்னைப்பற்றி எழுதத்தானோ?

உன் தலையில்
ஊர்ந்துஉன்னைக் கடிப்பது
பேன்களாக இருக்காது
வண்டுகளாகத்தான் இருக்கும்

கோடை விடுமுறைக்கு நீ
ஊருக்குப் போகையில்
நான் பள்ளிக்கூடம் போவேன்
உன்னைப் பற்றி படிக்க

மளிகைக் கடையில்
அரைக்கிலோ சிரித்தபடி
கால்கிலோ சக்கரை வாங்குவாய்
கடைக்காரனோ ஒருகிலோ உருகுவான்

உன் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கு
நடைவண்டியில்
நடக்கக் கற்றுக் கொடுத்தாய்
நடந்து கொண்டிருந்த என்னை
தத்தித் தவழ செய்துவிட்டாய்

கோலம் போடும் முன்
வாசலில் தண்ணீர் தெளிக்கிறாயே
உன் அடர்த்தியான அருகாமையில்
பூமி தீப்பற்றக் கொள்ளக்கூடாதென்றா?

விலை மதிக்க முடியாத
உன் உதட்டின் உஷ்ணத்தை
ஐம்பது பைசா பலூனுக்குள்
ஊதி வைக்கிறாயே

அக்கா சேலையைக் கட்டிக்கொண்டு
அண்ணன்காரனுடன் நீ
கோயிலுக்குப் போகையில்
மாமனாகிறது மனசு

கருப்பு மணிகோர்த்துப்
போட்டுக் கொண்டிருக்கும்
வெள்ளரிக் கனி நீ

உடைத்துத் தேங்காயைப்
பற்களில் கடித்து
நீ செய்த பல்வெட்டுக்கள்
தேங்காய்க்குத் தந்த கல்வெட்டுக்கள்

காதைப் பிடித்து
திருகுவது நீ என்பதால்
வானொலி கூட ஆனந்தமாய்
வாய்ப்பாட்டே பாடுகிறது

பாண்டி ஆட்டத்தில்
வானத்தைப் பார்த்துக்கொண்டே
கோடு தாண்டுவாய்
உன்னைப் பார்த்துக் கொண்டே நான்
ரோடு தாண்டுவேன்

தூக்கணாங் குருவிக் கூட்டை
ஆச்சர்யமாய் பார்த்தாய்
உள்ளிருந்த குருவிகள்
உன்னை ஆச்சர்யமாய் பார்த்தன…
அதிசயங்கள் ஒன்றையொன்று பார்த்து
அதிசயித்துக் கொள்வது
அதிசயமில்லை தானே!

துணி துவைக்கும் போது
சோப்பு நுரையைக்
கையில் அள்ளி ஊதி விடுவாய்
நாலாபுறமும் நுரை தெறிக்கும்
காற்றுக்கும் எனக்கும் உடல் சிலிர்க்கும்

நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா?

கொல்லைப் புறத்தில் மண்சுவர் கட்ட
உன்னை மண்குழைத்து மிதிக்க விட்டிருந்தார்கள்
நீ மிதித்த மண்ணில்
கட்டப்படும் சுவர்
மண்சுவர் அல்ல
பொன்சுவர்

ஆற்றுத் தண்ணீரில் நீ
வெள்ளை வெளேர் கால்களை வைத்ததுமே
ஆம்பிளை மீன்கள் எல்லாம்
ஆளாகிவிட்டன

வெள்ளிக் கிழமையானால்
அரசமரத்து விநாயகருக்கு
அகல்விளக்கு போடுவாய்
விநாயகருக்கும் எனக்கும்
வெள்ளிக்கிழமை வெளிச்ச நாள்

வடகம் காயப்போட்டு விட்டு
காக்கா ஒட்டிக்கொண்டிருந்தாய்
நீ ஓட்டும் அழகைக் காணவே
காகங்கள் வந்து குவிந்தன

முற்றத்திலிருந்த துளசி மாடத்தை
நீ சுற்றிவரும் போது
மாடத்துக்கடியில் அதன் வேர்கள்
மத்தளம் கொட்டிக்கொண்டது

முள்குத்திய இடத்தில்
கள்ளிப் பால் வைத்தாய்
உன் கண் குத்தியதற்காய்
நான்கள்ளிப்பால் வைக்க ஆரம்பித்தால்
அதில் குளித்தால் தான் ஆறும்

ஓவியப் போட்டியில்
பாரதியார் படம் நீ வரைந்திருப்பாய்
பாரதியார் அதைப் பார்த்திருந்தால்
தன் முண்டாசைக் கழற்றி
உன் தலைக்குக் கட்டிவிட்டிருப்பார்.

தினசரி உன் வீட்டு வாசலில்
கோலங்கள் தான் போடுகிறாயா?
இல்லை
பாத ஸ்பரிசங்களை சேமித்த நிலம்
ஒவ்வொரு காலையிலும்
அதைவெளிப்படுத்துகிறதா?

கொஞ்சம் உப்புக்கரிக்கிறதுஎன்பதால்
மதியம் நீ சாப்பிடவில்லையாம்
உப்பு சத்தியாக்கிரகம் என்பதுஇதுதானோ!

கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ கால்களில் அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம்

நீண்ட நேரம் நின்று
கண்ணாடியில் முகம் பார்க்காதே
கண்ணாடியின் உள்நாடிஆடிவிடப் போகிறது

குட்டி ஆட்டைப் பார்த்தால்
ஹை என்பாய்
உன்னைப் பார்த்தால்
குட்டி ஆடு மே என்னும்
மே என்பது ஆட்டு மொழியில்
ஹை தானே

பழைய பேப்பர் பையனுக்கும்
ஏன் புதிய புன்னகை போடுகிறாய்
அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத்தெரியுமா?
மகள்புருவ அசைவிலேயே
இதயத்தைபுடைத்து எடுப்பாள் என்று

புறாக்காலில் கடிதம் கட்டிவிடும்
சங்ககால ஆசை சிறகடிக்கிறது
கண்ணில்ஆனால்
சூப்பாகி விடுவோமா
புறாவும் நானும்?

பறவைகளின் மொழி கூடபுரிந்து விடும்-
ஆனால் உன்பார்வைகளின்
மொழிபுரிவது கடினம்
ஐந்து மணி அடித்ததும்
கண்களை விழிக்கிறாயா?
அல்லது நீ கண்களை விழித்ததும்தான்
ஐந்து மணி அடிக்கிறதா

நீ காது குடைவதற்காகத்தானே
இறகு வளர்க்கின்றன
இள மைனாக்கள்

டீக்கடையில் - உன்
பத்தாங்கிளாஸ் நோட்டுப்புத்தகம்
பஜ்ஜி மடிக்க வந்திருந்தது
அதைப் படிப்பதற்காகவே
நோட்டுப் புத்தகம் தீரும்வரை
பஜ்ஜிகள் வாங்கக் கொண்டிருந்தேன்

தீக்குச்சியை கொளுத்தி விட்டு
தீப்பெட்டி சும்மாயிருப்பது மாதிரித்தான்
என்னைப் படுத்திவிட்டு
இளிக்கிறாய் நீ

உன் கூந்தல் சிலுவையில்
அறையப்படும்மல்லிகைப் பூக்கள்
மறுநாள் மரிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன

புதுசாய் ஓவியம் வரைபவன்
மாதிரியேபுதுசாய் காதலிப்பவனும்
எங்கே ஆரம்பிப்பது என்பதுதெரிவதில்லை

சும்மா இருக்கும் நேரத்தில்
வயர் கூடை பின்னுகிறாய்
உன்னைப் பற்றி யோசிப்பதால்
நான் சும்மாவே இருப்பதில்லை

சிலந்தி நூலை விட மெல்லிய
உன் கேசத்திற்குள் புகும்
சாம்பிராணி புகையை
சுவாசிக்கவாவது
உன் கணவனாக வேண்டும்

ஆட்டுக்கு முள் குத்தினால்
அச்சச்சோ என்கிறாய்
என் ஹாட்டுக்குள் முள் குத்துதே
ஏன் அமைதியாய் செல்கிறாய்?

வாழைமரத் தண்டைப் பார்த்துவிட்டு
வளவளப்பாய் இருக்கிறது என்றாய்
உன் முதுகைப் பார்க்க
பாவம் முடியாதே உன்னால்

தினம் ஒரு முறையாவது
துணிகாயப்போட
மொட்டை மாடிக்கு வந்து
காய்ந்து நிற்கும் என் மனசை
நனைக்கக் கூடாதா?

உலகத்தில்
கவிஞர்களும் பைத்தியங்களும்
உருவாக்கப்படுகிறார்கள் போல
உன்னைப் பார்த்து இரண்டுமாய் நான்

பூஜை நேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது


மிகுதி அடுத்த பதிவில்….

Popular Posts