Monday, December 24, 2012

வீடு செல்ல மனமில்லை....


பின்னிரவு
மௌனம் -
அது ஓர் அகன்ற பாத்திரம்

இசையை நிறைத்துக்கொண்டிருக்கிறது
புல்லாங்குழல்

இருளின் தூக்கத்தைக்
கலைக்க முயல்கிறது
நிலவின் வெளிச்சம்

பூக்களின் நறுமணத்தை
காற்று
கவர்ந்து வருகிறது

புற்களின் மென்மை
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிறது
பாதங்களில்

வீடு செல்ல மனமில்லை....

1 comment:

சசிகலா said...

அழகிய வர்ணனை வாழ்த்துக்கள்.

Popular Posts