Tuesday, December 18, 2012

இசைப் புயல்


கரைந்து போகிறேன்
உன் இசையில்,
சில சமயங்களில்
பைத்தியமாகியிருக்கிறேன்...

மௌனக் காகிதத்தில்
நீ வரைந்த இசைக்கோலங்கள்
என் ஆன்மாவை வருடிப்போகிறது...

ஒரே பாடலை
ஒராயிரம் முறை கேட்டும்
ஒரு முறைகூட சலித்ததில்லை

மெட்றாஸின் மொஸார்டே
நீ இசையில் மேதைதான்

உன் இசைக்கு உயிர் இருக்கும்
உன் இசை உயிர் கொடுக்கும்

மொழிகளைத் தாண்டி
கண்டங்களைத் தாண்டி
எங்கும் தவழ்கிறது
உன் இசைக் காற்று

தமிழர்க்கு புகழ் சேரத்தாய் நீ

அலைகளில் மீட்டிய
உன் இசையை
கடல் கொண்டாடட்டும்...

1 comment:

S.Vaighundan said...

நல்லாத்தான் இருக்கு.... பாராட்டுக்கள் ... தொடர வாழ்த்துக்கள்....

Popular Posts