Monday, July 22, 2013

வாழ்தல் என்பது

பூக்களைக் கிள்ளாது
ரசித்துப் பார்

பட்டாம்பூச்சிகளின் படபடப்பில்
கண்கள் விரிந்த
ஆச்சர்யம்

நீரில் குதிக்கும்
மீன்களின் துள்ளலில்
உற்சாகம்

பூச்சிகளை
நசுக்காத மனம்வேண்டும்;
அவைகளின் விதி முடிக்காதே

நட்சத்திர இரவுகளையும்
மறந்துவிடாதே

புயல்களில் தப்பித்தல்தான்
வாழ்க்கையல்ல;
மழையில் நடனமிடுதலும்
வாழ்க்கைதான்...!

No comments:

Popular Posts