Saturday, January 12, 2013

வீடு செல்ல மனமில்லை 2


மாலைப் பொழுது
மழை வரும் நேரம்
காற்றில் சலசலப்பு
கதைபேசுகின்றன கிளிகள்

அகன்ற வானம்
கலையும் மேகங்கள்
மறையும் ஞாயிறு
மரிக்கும் பகல்

நெல் வயல்கள்
நீளமாய் வரப்புகள்;
கால் நனைக்க
அருகில் கால்வாய்

கோவில் மணியோசை
கோலமயில் நடனம்;
காற்று வெளியில்
புற்களின் சுகந்தம்

வீடு செல்ல இன்னும்
மனம் வரவில்லை....

No comments:

Popular Posts