Thursday, April 25, 2013

எனக்குள் ஒரு கேள்வி




வார்த்தைகள் பின்னிய
வலைகளுக்குள்
தொலைவதும்
பின் மீள்வதுமாய்
இருக்கிறது வாழ்வு!

அலைகள் எப்போதும்
ஓய்வதில்லை;
இரைச்சலும் அலைக்கழிப்புமாய்
மேலெழுகின்ற அகந்தை
ஆழத்தில்
எனது இருத்தலை
ஒளித்து வைத்துவிடுகிறது!

முடிவில்லாத பயணத்தில்
இளைப்பாற அமர்ந்த
மரத்தின்
ஒர் கிளையில
எழுந்தது
எனக்குள் ஒரு கேள்வி!
இன்னொரு மரத்தில்
கிடைக்கலாம்
என் கேள்வியை
அழித்துவிடுவதற்கான பதில்...!


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எழுந்த கேள்வி அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றி நண்பா!

Popular Posts