ரசித்துப் பார்

பட்டாம்பூச்சிகளின் படபடப்பில்
கண்கள் விரிந்த
ஆச்சர்யம்
நீரில் குதிக்கும்
மீன்களின் துள்ளலில்
உற்சாகம்
பூச்சிகளை
நசுக்காத மனம்வேண்டும்;
அவைகளின் விதி முடிக்காதே
நட்சத்திர இரவுகளையும்
மறந்துவிடாதே
புயல்களில் தப்பித்தல்தான்
வாழ்க்கையல்ல;
மழையில் நடனமிடுதலும்
வாழ்க்கைதான்...!