
சில பொழுதுகளில்
கனவுகளில்
தொடர்கிறது
விழிப்பு வந்தபோதும்
விழிகளிலேயே தங்கிவிடுகிறது
வியர்த்தமான பொழுதுகள்
இப்போது
பாலைவனத் தனிமையை
உணர்கிறேன்
முன்பும்
இங்கேதான் இருந்தேன்
ஆனால்
நீயிருந்தாய்!
வார்த்தைக்கு வார்த்தை
மௌனத்திற்கு மௌனம்
நம்மிடையே
நிகழ்ந்துகொண்டேயிருந்தது
இப்போது
வெறுமையின் திக்கில்
நகர்கிறது
வாழ்க்கை
தவறி வீழ்ந்தவனிலும்
தானாய் வீழ்ந்தவனின்
அனுபவம்
அலாதியானது
சிறிய
உணர்வுகள் கூட
சிலவேளைகளில்
அத்திவாரத்தையே பெயர்த்துவிடும்
ஆனால்
எனது அத்திவாரமே
அவைகளில்
உருவானதுதான்
அறிவாயா?